உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.
அஜர்பைஜானின் பாகு நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக்கோப்பை ரைபிள், பிஸ்டல் மற்றும் ஷாட்கன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது.
இந்த போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இதில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனை இளவேனில் வாலறிவன், ரமிதா, ஸ்ரேயா அகர்வால் ஆகிய மூவரும் 17-5 என்ற புள்ளிக்கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
மற்றொரு 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில், ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் பாட்டீல், தனுஷ் ஸ்ரீகாந்த் மற்றும் பார்த் மகிஜா ஆகிய மூவரும் தகுதிநிலை இரண்டில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.